இடுகைகள்

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்கள். இவர் இல்லுமினாட்டி என்கிற உலகை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு ரகசியக் குழுவின் உறுப்பினர் என்றும் கிறிஸ்துவ மத மாற்றக் குழுக்களுக்கு உதவி செய்ய இறக்கி விடப்பட்டிருக்கிறார் என்றும் பேச்சு. இதற்கு பதிலாக எதிர் கோஷ்டியினர் இவர் பாஜகவின் பி டீம் என்று கழுவி ஊற்றுகிறார்கள். திரைப்பட நடிகர் கமலஹாசன் குணாதிசயக் கூறுகளை உன்னிப்பாக கவனிக்கும் எவரும் அவற்றில் காணப்படும் முரண்கள் இது போன்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுப்பதாகவே புரிந்து கொள்வார்கள். அவர் இயல்பு. 'உதயநிதியை சந்தித்தீர்களா?' என்று நிருபர் கேட்டதற்கு இவர் அளித்த பதில் இவரை எல்லோரும் பயங்கரமாக நையாண்டி செய்யக் காரணமாய் அமைந்து விட்டது. நல்ல நடிகர், நடனம் ஆடுபவர், சினிமாவின் சகல துறைகளையும் நுணுக்கமாக அறிந்தவர், பாடக்  கூடியவர், பல மொழிகளிலும் உரையாடும் ஆற்றல் பெற்றவர், கடும் உழைப்பாளி போன்ற பல திறமைகளுக்கு சொந்தக்காரர். அரசியலில் இறங்கித்தான் பிரபல்யம் தேட வேண்டும் என்கிற தேவை இல்லாதவர் என...

வாய்ப்பில்லை ராஜா!

  தேர்தலுக்குப் பதினைந்து நாட்கள் இருக்கிற நிலையில் கட்சிகள் கவுண்ட் டௌனை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் நாம் தமிழர் கட்சி.  இந்தக் கட்சி சீமான் என்கிற ஒற்றைப் படைத் தலைமையை நம்பி உருவாக்கப் பட்ட இயக்கம். சினிமா, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் துதி, தமிழ் தேசியம், கிட்டத்தட்ட காந்தியத்தைக் காப்பி அடிக்கும் அரைகுறை பொருளாதார அறிவு, வெகு ஜன மந்தை மனப்பான்மையை கவர்ந்து எடுக்கும் விதமான வெற்று கோஷங்கள், இந்திய இறையாண்மைக்கு வெற்று சவால்கள் விடுத்துக் கொண்டிருப்பது இவை போன்ற கோளாறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஹிட்லரின் மெய்ன் காம்ப் புத்தகத்தைப் படிக்கும் எவரும் சீமான் ஹிட்லரின் வெகு ஜனத்தைக் கவர்ந்து இழுக்கும் ஹிட்லரின்  உத்திகளைக் கூசாமல் பின் பற்றுகிறார் என்று எளிதாகச் சொல்ல முடியும். இவரின் நல்ல விஷயங்கள் என்ன? 1. மிகவும் கவர்ச்சிகரமான ஆக்ரோஷமான பேச்சாளர். இவர் பேச்சைக் கேட்கும் எவரும் இவரை விரும்பாமல் இருக்க முடியாது. என்ன  அபத்தமாகப் பேசினாலும் அதை வசீகரமாக மாற்றுகிற உடல் மொழி. 2. ஊழல் குற்றச்சாட்டு கிடையாது. ஏன் என்றால் இவர் ஆட்சியில் இல்லை. 3. 234 த...

மதுரா விஜயம்

மதுரா விஜயம் வெளியே “ஜெய விஜயீ பவ!” என்கிற கோஷம் விண்ணைப் பிளந்தது. கங்காதேவிக்கு ஒரு ஆச்சர்யமும் எதிர்பார்ப்பும் இல்லை. படை வீட்டில் அமர்ந்து கொண்டு தான் சற்று முன் பூஜை செய்திருந்த பவானி அன்னையின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சங்கம குலகுருவான கிரியா சக்திப் பண்டிதர் வயது முதிர்ந்த பிராயத்தில் அவளுக்கு அளித்த பிரதிமை அது. நல்ல சிற்பியின் கை வேலைப்பாடு அந்தச் சிலையில் மிளிர்ந்தது. அமர்ந்த நிலையில் இருந்த அந்த ஐம்பொன்னால் ஆன சிலை தவழ்ந்த புன்முறுவலுடன் திருத்தமாக அமைக்கப்பட்டிருந்தது. கையில் வில்லும் பாசங்குசமும் அபய ஹஸ்தமும் கொண்டிருந்த அருமையான சிலை. கிரியா சக்திப் பண்டிதர் குருநாதர் விஸ்வநாதனிடம் சொல்லி அனுப்பினாராம்: “பிராண பிரதிஷ்டை செய்து விட்டேன். என் யோக சக்தி எல்லாம் இதில் இறக்க விட்டேன். வீட்டுக்கு விலக்கான நேரம் தவிர மற்ற காலங்களில் தவறாமல் பூஜை செய்யச் சொல்லு. கங்கா போகின்ற இடங்கள் எல்லாம் ஜயமாகவே இருக்கும். கங்காவின்...

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை தொடர் குறித்து சொல்வனத்தின் மதிப்புரை

அஸ்வத் எழுதிய ‘தொல்வெளியிலிருந்து ஓர் இசை’ – கட்டுரைத் தொடர் முடிவு குறித்து: தமிழிலக்கியத்தில் முற்றிலும் புது வகைக் கருத்துகள், சிந்தனைகளைக் கொடுக்கும் பல கட்டுரைத் தொடர்களைச் சொல்வனம் வெளியிட்டு இருக்கிறது. இவை எவை போலவும் இல்லாத ஒரு அபூர்வமான கட்டுரைத் தொடர் அஸ்வத் நாராயணன் எழுதிய  ‘தொல்வெளியிலிருந்து ஓர் இசை’ என்பது.  இதை எப்படி வகை பிரிப்பது என்று துவக்கத்திலிருந்து இறுதி வரை எங்களுக்கு ஓர் முடிவின்மைதான் இருந்திருக்கிறது. இது கர்நாடக இசை பற்றியது, ஒரு இளம் மேதை பற்றியது, சிறுவனாக இருந்ததிலிருந்து இளைஞனாக வளர்ந்த நிலை வரை ஓர் இளம் ஜீவன் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது, இன்னும் சிறிது அவலச் சுவை வேண்டுமெனில் நம் கலைப் பரப்பில் என்னென்ன விதமான கசப்புகள் நிலவுகின்றன  என்றும் சுட்டுவதாகவும்  இதை நாம் பார்க்கலாம். ஒரே நேரம் பண்டை உலகத்தின் சுவடுகளை இன்றும் சுமந்திருக்கும் நம் பண்பாடு, கலை, சிந்தனை வெளியிலும் சஞ்சரித்து, இன்றைய பெருநகரங்களின் கடுமை நிறைந்த வெளியிலும் உலவி, அரூபமான கலையின் நுட்பங்களிலும் திளைத்து வந்திருக்கிற கட்டுரை இது. கட்டுரையாள...

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை XIII

படம்
அத்தியாயம் 34 என் தந்தை 92 வருடங்கள் வாழ்ந்தார். ஒழுக்கத்தாலும் கட்டுப்பாட்டினாலும் இளைஞனைப் போல் வாழ்ந்து மறைந்தார். சுகமோ துக்கமோ எல்லாவற்றையும் விழுங்கியவர். அதிகம் பேசுகிறவர் அன்று. அளவாகத் தான் பேசுவார். கடைசியில் 92 ஆம் வயதில் வந்த சிறுநீர் அடைப்பு அவரைக் கிட்டத்தட்ட ஒரு மாதம் படுக்கையில் தள்ளியது. நாங்கள் அருகில் இருந்து கவனித்து வந்தோம். காலையில் செய்தித்தாள் வந்து விட்டதா என்று வினவுவார். வந்தால் மூக்குக் கண்ணாடியை அணிவித்து பேப்பரைப் பிடித்துக் கொள்வோம். அவர் படுத்த மேனியிலேயே தலைப்புச் செய்திகளாய் மேய்ந்து விட்டுப் போதும் என்பார். இறப்பதற்கு கொஞ்ச நாள் முன்னர் அவர் நினைவு எப்படி இருக்கிறது என்று பரிசோதிப்பதற்காகக் காதில் ‘அப்பா! ‘ஹைனஸ்’ (எங்கள் ஊர் மன்னர்) இருக்காரா?’ என்று வினவினேன். ‘இல்லை போயிட்டான்; மூணு மாசம் ஆய்டுத்து’ என்றார். அவர் நினைவு கடைசி வரையிலும் அவ்வளவு துல்லியமாக இருந்தது. என் அன்னை விருத்தாப்பியத்தில் இருந்த போது என் வீட்டிற்கு ஒரு நண்பர் வந்திருந்தார். நாஸ்திகர். பிராமணர்கள் மீது காழ்ப்புணர்ச்சி உண்டு. ஜெயகாந்தனைக் கொண்டாடுவார். ஜெயகாந்தன் எழுத்துக்க...

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை XII

அத்தியாயம் 32 இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கும் போது தற்செயலாக ஒரு நீண்ட நாள் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் தொடர்பு கொண்ட வேறு இரு நண்பர்களிடமும் இவரிடமும் இந்தத் தொடர் பற்றிப் பேச்சு வாக்கில் தெரிவித்திருந்தேன். மூவரும் படித்துவிட்டு ஒரே குரலில் என்னிடம் , “ ஏன் இவ்வளவு வெறுப்பு ?”  என்று வினவினார்கள். என்னை நீண்ட நாளாகத் தெரிந்திருப்பதால்  –  இது  –  இத்தொடரின் தென்படும் துவேஷம் அவர்களுக்கு என் இயல்புக்கு மாறான முரணாகத் தோன்றியிருக்க வேண்டும். மூன்று பேரும் ஒரு மித்த குரலில் சொல்லியிருப்பதால் அது உண்மையாகவே இருக்க வேண்டும். இதைத் தவிர வேறோர் நண்பரும் தானாகப் படித்து விட்டு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்  “ வெறுப்பை நான் பார்க்கவில்லை ;  பிள்ளையைப் பற்றித் தகப்பன் வெளிப் படுத்தும் ஆதங்கத்தையும் ஆற்றாமையையும் நான் பார்த்தேன் ”  என்றார். இவர் கூறுவதும் உண்மையாக இருக்கலாம். நான் மேற்கூறிய ஒரு நண்பரிடம் , “ தொடர் எழுதப் போகிறேன் ”  என்று முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். அவர் என்னிடம் , “ ஆதித்யாவோட சங்கீதத் திறமைய...