சனி, 8 செப்டம்பர், 2012

வெகுஜனப் பத்திரிகை ஒன்றை நான் வழக்கமாகப் படித்து வருகிறேன். மிகவும் பாரம்பரியமான பத்திரிகை அது. அதில் மிகவும் புகழ் பெற்ற கார்டூனிஸ்ட் ஒருவர் உண்டு. மிகவும் புத்திசாலித்தனமாக அவர் வரையும் கார்டூன்கள் மிகவும் உலகப் புகழ் பெற்றவை. ஒன்று இரண்டு வரலாற்று நூல்களையும் எழுதிய அவருக்கு அற்ப காரணுங்களுக்காக கல்தா கொடுத்தார்கள். அதே சமயம் மிகவும் சாமர்த்தியமான திரைப் பாடலாசிரியர் ஒருவர் எழுதிக்கொண்டிருந்த கதை த் தொடர் முடிய அதற்குப் பாராட்டு மழை. கிராமத்தைப் பற்றி கதை சொல்லிகளின் உதவியுடன் எழுதப்பட்ட இந்த  நெடுந்தொடரில் 'கிளிசே' மனிதர்கள்தான் உலா வருகிறார்கள். இந்த எழுத்தாளர் கடந்த 40 வருடங்களாக சென்னைவாசி. கிராமத்துக்கும் அவருக்கும் ஸ்நானப்ராப்தி கிடையாது.
கட்டுரைகள் வன்முறை பற்றி சர்வ சாதரணமாக விவரிக்கின்றன. அந்தக்காலத்தில் மஞ்சள் பத்திரிக்கைகள்   கூட வெளியிடத் தயங்கும் கொடுமைகளை புலனாய்வு என்கிற பெயரில் வெளியிடுகின்றன. பக்கத்துக்குப் பக்கம் சினிமா.
இப்போது  ஒரு பேட்டியில் ஒருவர் தெய்விக சிலைகளைச் செய்வதாகவும் ஆனால் தெய்வ நம்பிக்கை இல்லை என்றும் தொழிற்சாலைகளில் பொருட்கள் செய்வது போல் தான் இதுவும் என்று சமஸ்க்ருதத்தையும் ஆன்மிகத்தையும் கிண்டல் அடித்திருக்கிறார்.
இதே trend தான் ஏனைய பத்திரிக்கையிலும். ஆச்சர்யகரமாக குங்குமம் நன்றாக இருக்கிறது. அமுத சுரபியும் கலைமகளும் தரமாகவும் கண்ணியமாகவும் கனமான உள்ளடக்கத்துடனும் வருகின்றன.

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...