இடுகைகள்

மே, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகத்தான எழுத்தாளர் கல்கி

                                     பிற்கால சோழர்களில் ஆதித்த கரிகாலன் கொலையுண்டதும் சுந்தர சோழனுக்குப் பிறகு உத்தம சோழன் பட்டத்துக்கு வந்ததும் சரித்திர நிகழ்வுகள். ஆதித்த கரிகாலன் கொலையுண்டது பாண்டிநாட்டு சதிகாரர்களால் என்று கூறப்பட்ட போதிலும் அது இன்றுவரை துப்புத் துலங்காத மர்மமே. இந்த மர்ம வலைப் பின்னலில் நந்தினி என்று ஒரு கற்பனா பாத்திரம் - இந்த நந்தினியின் பிறப்பு என்கிற மர்மம். இந்த மர்ம முடிச்சைக் கொஞ்சங் கொஞ்சமாய் அவிழ்க்கும் சுந்தர சோழர், அநிருத்த பிரம்மராயர், செம்பியன் மாதேவி, மதுராந்தகன், கருத்திருமன் ஆழ்வார்க்கடியான் என்பன போன்ற எண்ணிறந்த கதாபாத்திரங்கள்.            மொத்தம் ஐந்து பாகங்கள். ஒவ்வொரு பாகமும் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள் மீண்டும் மீண்டும் பிரசுரம் செய்தும் இன்றும் படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும் மகத்தான காவியத்தைத் தமிழில் எழுதியவ...