மாதொரு பாகன்
எல்லோரும் கிழி கிழி என்று கிழிக்கிறார்களே அதில் என்ன தான் எழுதி இருக்கிறது என்று பார்க்கலாமே என்று மிகவும் முன் முயற்சி எடுத்து மாதொரு பாகன் நாவலை வாங்கினேன். தமிழில் கிடைக்கவில்லை. பெங்குவின் வெளியிட்டிருந்த ஆங்கில மொழியாக்கம் கிடைத்தது. அது குறித்து என் வினையாடல்கள் (!) வருமாறு: பிள்ளையில்லா தம்பதியினருக்கு சமுதாயம் கொடுக்கும் மன அழுத்தம் தாங்க முடியாமல் வருத்தத்தில் இருக்கும்போது இரண்டு வீட்டுப் பெரியவர்களும் சேர்ந்து கோவில் திருவிழாவில் பிற ஆடவனுடன் பிள்ளையில்லாப் பெண் கூடி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்கிற ஐதீகத்தைச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.கணவனுக்கு ஒப்புதல் இல்லை. கணவன் ஒப்புக் கொண்டது போல் நாடகமாடி அவன் மனைவியை சம்மதிக்க வைத்து விடுகிறார்கள். கடைசியில் கணவன் விஷயம் தெரிந்து மிகவும் விரக்தி அடைகிறான். இதற்கு சாஸ்திர சம்மதம் இருக்கிறதா? சந்ததி இல்லாமல் இருக்கும் பெண்ணின் கணவன் சிறு வயதிலேயே இறந்து விட்டால் பெண் அவள் மைத்துனனிடம் கூடிப் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்கிறது மனு ஸ்ம்ருதி. சத்ய காம ஜாபாலன் கதை நினைவ...