இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விருது-சிறுகதை

நல்லூர் சங்கீத வித்வான்களுக்கு கோவிந்த ராவ் வீட்டு பஜனை தான் புகலிடம் . வருடம் ஒரு முறை நரசிம்ம ஜயந்தி உற்சவம் பத்து நாள் நடக்கும் போது கொஞ்சம் “கா ர்வார் ” பண்ணிக் கொண்டிருப்பார்கள் . அங்கேயும் கச்சேரிகளில் வெளியூர் வித்வான்களுக்குத்தான் பிராதான்யம் . பஜனையில் விசு சார் ஓர் ஓரமாய் உட்கார்ந்திருப்பார் . அவரைப் பார்த்தால் எவருக்கும் சங்கீத வித்வான் என்று தோன்றாது . அப்படி ஓர் அசட்டுக் களை . சாம்பல் பூத்த கருப்பு . நீர்க் காவி ஏறிய வேஷ்டி , நைந்து போன சட்டை . தோளில் அதே கலரில் துண்டு , பஜனை சுமாராக இரவு எட்டு மணி வாக்கில் ஆரம்பிக்கும் . வெங்காச்சமும் , சீமாச்சுவும் வரும் வரையில் எல்லோருமே காத்திருப்பார்கள் . ஏனென்றால் வெங்காச்சம் தான் ஹார்மோனியம் வாசிப்பார் . சீமாச்சு கையில் தான் பஜனை சம்ப்ரதாய புத்தகம் இருக்கும் . அவர்கள் வரும் வரை விசு சார் வாயை யாராவது கிளறிக் கொண்டிருப்பார்கள் . அவரும் சிரித்துக் கோண்டே ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார் . அவர் சரஸு மாமியைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட சம்பவத்தைக்...