இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமீபத்திய நான்கு நிகழ்வுகள்-சில பதிவுகள் IV

வர்தா புயல் தந்த செல்வம்  பன்னீர் செல்வம்! பெரிய ஆல மரத்தின் கீழ் செடி கொடிகள் வளராது என்பார்கள். பெரிய ஆலமரம் வேரற்றுச் சாயும் போது அடியில் சில செடிகள் துளிர் விடும் போலும். சென்ற வருடப் பெரு மழையின் போது விளைந்த கோர தாண்டவத்தை தொலைக் காட்சி  ஊடகங்களுடன் சேர்ந்து அரசும் வேடிக்கை பார்த்தது. அதன் வீச்சை எதிர் கொள்ள முடியாது அரசு எந்திரம் ஸ்தம்பித்தது. கட்சிக்காரர்கள் விளம்பரத்திலும் வாக்கு வாதங்களிலும் காட்டிய முனைப்பை நிவாரணப் பணிகளில் காட்டவில்லை. இரண்டு காரணங்கள் இருந்திருக்க முடியும். அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலையில் சுதந்திரம் கொடுக்கப் படவில்லை என்று நினைக்கும் அளவிற்கு இருந்த மேலிடக்  கட்டுப்பாடுகள். என்ன செயலின்மை இருந்தாலும் அம்மாவின் செல்வாக்கு அதனை ஈடு செய்து விடும் என்கிற மெத்தனம். இதை  மீறி முதன் முதலாகத் தனக்கு கிடைத்த வாய்ப்பை  இந்த முறை பன்னீர் நன்கு பயன் படுத்திக்க கொண்டார் என்றே சொல்லவேண்டும். கச்சிதமான முன்னேற்பாடுகளுடன் ஆரவாரமில்லாமல் புயலைத் தமிழகம் எதிர் கொண்டதற்கு திரு.ஓ பன்னீர் செல்வம் முக்கிய காரணம் என்று சொல்ல வேண்ட...

சமீபத்திய நான்கு நிகழ்வுகள் -சில பதிவுகள் III ஆ

இந்தியாவின் தனி நபர் எதிர்க் கட்சியின் மறைவு  இதன் பின்னர் சோவின் அம்மையார் எதிர்ப்பு அவர் முதலாம் ஆட்சி முடிவுக்கு வரும் வரை நீடித்தது. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் உறவை முறிக்க மறுத்த கையோடு தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானதும் அதன் திமுக தொகுதி உடன்பாட்டுக்குச் சோ பெரும் பங்காற்றினார். அத்துடன் அவரின் ஜெயலலிதா எதிர்ப்பு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் வந்த காலங்களில் அவரின் மறைவு வரைக்கும்  அவர் ஏதோ காரணங்களால் அம்மையாரின் பெரிய ஆதரவாளராக மாறிப் போனார். கடுமையாகவோ கிண்டலாகவோ அம்மையாரை அவர் விமர்சிக்கத் தயங்கியது ஏன் என்பது இன்று வரை துலங்காத மர்மமே. சோ முக்கியமான தருணங்களில் தீர்மானமான நிலைப் பாட்டை  எடுத்தார். அவையாவன: 1. துக்ளக் திரைப்படம் வெளியாவதில் கடும் நெருக்கடிகளை சந்தித்த போது அதைத் துணிவுடன் எதிர்த்தார். 2. நெருக்கடி நிலையைத் துணிவுடன் எதிர்த்தார். 3. திமுகவின் ஒழுங்கீனங்களைச் சாடியவாறே இருந்தார். காங்கிரஸ் வலுவிழந்த நிலையில் அதிமுக கிட்டத்தட்ட திமுகவின் வழிகளையே கொண்டிருந்த நிலையில் விமர்சிக்கும் தேவையை அவர் எதிர்க்கட்சி நிலையில் நின்று பூர்த்தி செய்தா...

சமீபத்திய நான்கு நிகழ்வுகள் -சில பதிவுகள் III அ

இந்தியாவின் தனி நபர் எதிர்க் கட்சியின் மறைவு  துக்ளக் ஆசிரியர் சோ மறைந்தார். அம்மையார் இறந்ததனால் சோவின் மறைவு பெருமளவில் கவனிப்பு பெறாமல் பொய் விட்டது. ஊடகங்கள் பெருமளவில் அதை ஈடு செய்தாலும் வெகு ஜனத் தலைவராக அவர் இல்லாததனால் பெரிதாகப் பொருட்படுத்தப் படவில்லை. இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போல் புனைந்த கார்ட்டூனை அட்டைப் படத்தில் தாங்கி  வெளியான அவரின் முதல் இதழிலிருந்து அவரின் வாசகனான நான் பல்வேறு சமயங்களில் அரசியல் கலாசார சமூக பொருளாதாரப் போக்குகளையும் நோக்குகளையும் தெளிவு படுத்திக்கொள்ள அவரைச் சார்ந்திருந்தேன் என்பதை இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். குறிப்பாகக் கலைஞரின் அரசியலுக்கு எப்போதுமே அவர் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்தார். அதில் பெருமளவு நியாயமும் இருந்தது. இந்திரா காந்தியை மோசமாக எதிர்த்தார். நெருக்கடி நிலையின் போது மிகவும் சாதுர்யமாகவும் துணிச்சலுடனும் பத்திரிக்கையை நடத்தினார். (இந்திரா காந்தி யார்? என்கிற கேள்விக்கு சஞ்சய் காந்தியின் தாய் என்று அவர் அளித்த பதில் தணிக்கை செய்யப் பட்டது!) ஒரு இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்களை (ஜெயகாந்தன்...

சமீபத்திய நிகழ்வுகள்-சில பதிவுகள் II

அம்மா! ஜெயலலிதா மறைந்து விட்டார். நான் ஒன்றும் அவரது பெரிய விசிறி இல்லை ஆயினும் மிகவும் வருத்தமாக இருந்தது. அவருடைய துன்ப வாழ்க்கை முடிவுக்கு வந்தது. எல்லோரும் பேசிக்கொள்வது போல் பொது வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு மேலே வந்தாராயினும் அந்தரங்க வாழ்க்கையில் மிகவும் தனியாகவும் உண்மையான பாசத்துக்கு ஏங்கும் முரட்டுக் குழந்தையாகவுமே மரிக்கும் வரையிலும் விளங்கினார். கலைஞர், கண்ணதாசன் மறைந்த போது 'கை நீட்டுவோர் பக்கமெல்லாம் கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ ' என்று எழுதினார். இது அம்மையாருக்கும் பொருந்தும். அந்த பலவீனத்தை எல்லோரும் பயன் படுத்திக் கொண்டார்களே தவிர அவர் மீது உண்மையான அக்கறை யாராவது காட்டினார்களா சந்தேகம் தான். சற்று உற்று நோக்கினால் எம்ஜியாருக்கும் என்டியாருக்கும் இது தான் நடந்தது. அவர்கள் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டார்கள். அம்மையார் முதலில் அன்னையின் வற்புறுத்தலுக்காகப் படிப்பைப் பாதியில் விட நேர்ந்தது. இதை அந்த நாளில் குமுதத்தில் எழுதிப் பாதியில் நிறுத்திய சுய சரிதையில் குறிப்பிடுகிறார். பின்னர் எம்ஜியாரின் ஆளுமையின் நிழலில் வாழ நேர்ந்தது. எம்ஜியார் மறைந்த ...

சமீபத்திய நான்கு நிகழ்வுகள்-சில பதிவுகள் I

பண மதிப்பின்மை அறிவிப்பு வந்த போது பர்ஸைத் திறந்து பார்த்தேன். 140 ருபாய் இருந்தது. பின்னர் தான் எல்லா செலவுகளையும் இத்தனை நாளாக அட்டையையும் ஆன்லைன் பண மாற்றங்களையும் வைத்தே சமாளித்து வந்திருக்கிறேன் என்று புரிந்தது. என்னிடம் கறுப்புப் பணமும் இல்லை. கையில் பெரும் பணம் வைக்க வேண்டிய தேவையும் இல்லை. ஆனால்..... கறுப்புப் பண முதலைகள் அரசின் இந்த மிரட்டல்களுக்கு ஈடு கொடுத்தே வருகிறார்கள். பெருமளவில் பாதிக்கப் படுவது ஒழுங்கு முறைத் தொழில் சாரா வெகு மக்கள் தாம். அல்லாடுகிறாரகள். ஏற்கெனவே அன்றாடக் கூலி+அரை வயிற்றுக் கஞ்சி. இந்த லட்சணத்தில் சொந்தப் பணத்தை எடுக்கப் பிச்சை எடுக்க வேண்டிய நிலை. ஆன்லைன் வர்த்தகம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று வெந்த புண்ணில் வேலைப்  பாய்ச்சுவது போல் அரசின் அறிவுரை வேறு. அனா ஆவன்னா தெரியாதவனை திருப்புகழ் படிக்கச் சொன்னது போலிருக்கிறது. வேறு இடங்களில் புது நோட்டுகளைக் கொத்துக் கொத்தாக அள்ளுகிறார்கள். இவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தும் இது எப்படி நடக்கிறது என்கிற கேள்வி எழுகிறது.  அதிகார/பண வர்க்கத்தின் மேலிருந்து கீழ் வரை நேர்மையின்மை கோலோச்சிக் கொண்ட...

முக நூலர்களின் முகவரிகள் III

பதிவுகள் செய்யப் பத்து கட்டளைகள்: 1. மொழி: பண்டிதத் தமிழில் எழுத கூடாது. யாரும் படிக்க மாட்டார்கள். மொக்கை, மெர்சல், தரியல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். சொன்னார்கள் என்பதை 'சொல்லிட்டாங்கேய்' என்றால் தான் மரியாதை. புது வார்த்தைகளுக்கு அகராதிகளை புரட்ட வேண்டிய அவசியம் இல்லை. நான்கைந்து திரைப்படங்களை பார்த்தாலே போதும். 2. கூடிய மட்டில் சுருக்கமாகப் பதிவுகள் இருக்க வேண்டும். ஒரு வரி அல்லது ஒற்றை வாக்கியம் போதுமானது. அது கூடிய மட்டில் சினிமாவில் வருகிற 'பன்ச் டயலாக்' மாதிரி இருந்தால் நல்லது. இளம் பெண்களாக இருந்தால் 'வானத்தில் சிட்டுக் குருவியைப் பார்த்தால் றெக்கை கட்டி பறக்குது மனசு' என்று சந்தேகாஸ்பதமாக சொல்லிவிட்டால் போதும். போகிற வருகிறவர்கள் 'லைக்குகளை' அள்ளி விடும். 3. நல்ல சமுதாயத் தாக்கத்துடன் இருக்க வேண்டும். லஞ்சம், ஊழல்,எதேச்சாதிகாரம் போன்றவைகளுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டும். (அந்தரங்கத்தில் நாம் சற்று முன்னே பின்னே இருந்தால் பரவாயில்லை). 4. அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபலங்களைத் திட்ட வேண்டும். (கொஞ்சம் ஆபத்தான வழி; திருப்...

முக நூலர்களின் முகவரிகள் II

முக நூல் ஒரு பரந்து பட்ட தளத்தைத் தருகிறது. இதை உபயோகிப்பவர்கள் வருமாறு: 1. பொதுவாக சுய விளம்பரத்தில் மோகம் கொண்டவர்கள். இதில் யாருமே விதி விலக்குக் கிடையாது (நான் உள்பட). பெரிய தகுதி இல்லாமல் என்னால் இதைத் தேடிக் கொள்ள முடிகிறது. காரணம் என்னுடைய இலக்கு ரசிகர்களை நானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது. என் நண்பர் எனக்கு 'லைக்' போட்டால் நான் அவருக்கு 'லைக்' போடுகிறேன். நீ எனக்கு சொறிந்து விடு; நான் உனக்கு சொறிந்து விடுகிறேன்' பாணியில். 2. முக்கியத்துவத்துக்காக ஏங்கும் சாதாரணர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் கடை நிலை ஊழியர் சபரி மலைக்கு குருசாமியாக இருப்பது போன்றது தான் இதுவும். மேலதிகாரியாகப் பணியாற்றுபவர் கன்னி சாமியாக வந்து குருசாமி காலில் விழுந்தால் அதில் ஒரு குரூர திருப்தி. 3. ஒழுங்கு படுத்தப் படாத துறைகளில் இருப்பவர்களுக்கு இது போன்ற விளம்பரங்கள் உறு துணையாக இருக்கின்றன. பாடகர்கள், ஆக முயற்சிப்பவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் படைப்புகளுக்கு இலவச விளம்பரங்கள் முக நூல் தருகிறது. இதில் அரசியல்வாதிகளும் விதி விலக்கல்...

முக நூலர்களின் முகவரிகள் I

சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்த நண்பர் நான் கைபேசியுடன் அவ்வப்போது மும்முரமாய் இருப்பதை ஸ்வாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதுமே அவர் சளசளவென்று பேசிக்கொண்டிருப்பார். நான் கேட்டுக் கொண்டிருப்பேன்;அல்லது அவர் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பேன். வழக்கத்திற்கு மாறாக அவ்வப்போது நான் இடைவெளி விட்டு கைபேசியை நோண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த  அவரை நான் உதாசீனப் படுத்துகிறேன் என்று அவர் நினைக்க இருந்த வாய்ப்பை நான் பொருட்படுத்தாமல் இருந்தது அவரை மிகவும் ஆச்சர்யப் படுத்தியது. எனக்கும் சற்று வியப்புத் தான். இதில் எப்படி இறங்கினேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். மேஜைக் கணினி வரையில் சற்று சுமாராகப் போய்க் கொண்டிருந்தது. ஆண்ட்ராய்டு கைபேசி வந்தவுடன் தான் சற்று அதீதமாகப் போய் விட்டது. முக நூல் அல்லது வாட்ஸ் அப்; ஒழிந்த நேரங்களில் யு ட்யூப். பாராயணம் செய்து கொண்டிருந்த அபிதான சிந்தாமணியை அவ்வப்போது புரட்டுகிறேன். ராமாநுஜாசார்யாரின் மஹாபாரதம் அப்படியே இருக்கிறது. பவர் என்னும் புத்தகம், மார்கோ போலோவின் பயணக்  குறிப்புகள், நூலகத்திலிருந்து கொண்டு வந்த புயலில் ஒரு தோணி, உபநிடத சாரம்...

அரிய நாச்சி-சிறுகதை- அஸ்வத்

“என்ன?” என்றார் ராமையா சாஸ்திரி முன்னால் வைக்கப்பட்டிருந்த சட்டியில் இருந்த சோற்றை அளைந்து கொண்டே. கதவுக்குப் பின் நின்ற கொண்டிருந்த லட்சுமி இன்னும் இழுத்துப் போர்த்தியவாறு “மகாளயமா இருக்கு; இந்தப் பழையதை இப்பவாவது சாப்பிடாம இருக்கலாமே?” என்றாள் பயத்துடன்... "அதெல்லாம் பரவாயில்லைன்னா” என்றார் ராமையா சாஸ்திரி - முகம் பார்த்துப் பேச மாட்டார். வெட்கமா, மனைவிக்கு இடம் கொடுத்துவிட்டால் பின்னால் மிகவும் கஷ்டமாக ஆகிவிடும் என்றா தெரியாது. பல நாட்களுக்குப் பேச்சே கிடையாது. ‘இன்றைக்கு சுபதினம்; ஒரு வார்த்தை உதிர்ந்திருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டே நகர்ந்தாள் லட்சுமி. ஒரு குழந்தை இருந்திருந்தாலாவது அதைச் சாக்காக வைத்து ஏதாவது பேசிக் கொள்ளலாம். அதற்கும் கொடுப்பினை இல்லாது போய்விட்டது. ராமையா சோற்றை அள்ளி வாயில் போட்டார். தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயம். சுளீரென்று தலைக்கு ஏறியது. தண்ணீரை எடுத்து விழுங்கினார். மகாளயமாவது ஒன்றாவது? நாற்பது வருடங்களாக இந்த ஊளைச்சோறுதான். பஞ்ச பட்ச பரிமானமெல்லாம் அப்பா வைசூரியில் போனவுடன் போய்விட்டது. பத்தாம் நாள் காரியம் ஆனவுடனேயே அம்மா மாமா வீட்டிற்...

சொல்வதெல்லாம் ....

பொழுது போகாமல் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை அவ்வப்போது பார்க்கிற வழக்கம். அதை நடத்துகிற அம்மை ஒரு போலீஸ்காரரின் நிமிர்வுடன் நடந்து கொள்கிறார். வருகிறவர்களை சாதுர்யமாகக்  கேள்வி கேட்டு சாமர்த்தியமாக உண்மையை வரவழைக்க முயற்சிக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக உரையாடல்களை நகர்த்திச்  சென்று முடிவில் தீர்ப்பும் தீர்வும் வழங்குகிறார். வருபவர்கள் முக்காலே மூணு வீசம் பேர் கீழ்நிலை மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் கள்ள உறவு; குடி;காதல்; ஏமாற்றிவிட்டு ஓடுவது. இவைதான் பிரச்சனைகளாக முன் வைக்கப் படுகின்றன. இரு பாலைச் சேர்ந்தவர்களும் பேதமில்லாது குற்றம் இழைப்பவர்களாகவும் பாதிக்கப் படுகிறவர்களாகவும் இருக்கின்றனர். சில சமயங்களில் புகார் சொன்னவர்களே உண்மையில் தவறு செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் நிறைய ஆச்சர்யங்கள் உண்டு: தவறு செய்பவர்கள் பெரும்பாலும் குற்றத்தை பெருமளவில் மறுக்க முயற்சிக்காமல் அதற்கான நியாயங்களை நிறுவுவதில் முனைப்பு காட்டுகிறார்கள். நெறி ஆளுநர் பல சமயங்களில் தவறு செய்ததாகக் கருதுவர்களை கிட்டத்தட்ட மிரட்டுகிறார். இதற்கெல்லாம் சட்ட ஒப்புதல் இருக்கிறதா...

Aditya Mohan Dorakuna Bilahari

படம்

வைரமுத்துவின் சிறுகதைகள்-அஸ்வத்

கவிஞர்கள் கதைகளை எழுதுவதை நான் சற்று விநோதமாக உணர்வதுண்டு . எப்படி கவிஞர்கள்   கதைகள்  எழுத முடியாதோ அதேபோல கதைஞர்களும் கவிதைகள் எழுத    முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது . கதையென்பது நிலக்களனை விவரிப்பதுடன் முடிகிறது . கவிதை என்பது எப்போதும் மையப் புள்ளியை நேரடியாகச் சுட்டுவது . இரண்டின் விளையும் ஒன்றே . கவிதை என்றாலும் கதை என்றாலும் சொல்ல வந்த கருப்பொருளை வார்த்தைகள் அல்லது விவரிப்பையும் மீறி மறை பொருளாகவும் பூடகமாகவும் சுட்டுவதே காலத்தை வென்று நிற்கும் என்று தோன்றுகிறது . தவிரவும் வைரமுத்துவின் எழுத்தைப் பற்றி எனக்குச் சந்தேகங்கள் உண்டு . வார்த்தைச் சிறைகளில் மாட்டிக் கொண்டு வெளிவர முடியாதவர் என்கிற அபிப்ராயம் என் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டதால் அவரின் கவிதைகள் பக்கம்    அவ்வளவாகப் போனதில்லை . இவர் வார்த்தைக் குவியல்களுக்குள் சொல்ல முடியாத விஷயத்தைக் கண்ணதாசன் எளிய நடையில் சர்வ சாதாரணமாக சொல்லி விட்டுச் சென்று விட்டார் . இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இவரின் சிறு...