இடுகைகள்

செப்டம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொல்வதெல்லாம் ....

பொழுது போகாமல் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை அவ்வப்போது பார்க்கிற வழக்கம். அதை நடத்துகிற அம்மை ஒரு போலீஸ்காரரின் நிமிர்வுடன் நடந்து கொள்கிறார். வருகிறவர்களை சாதுர்யமாகக்  கேள்வி கேட்டு சாமர்த்தியமாக உண்மையை வரவழைக்க முயற்சிக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக உரையாடல்களை நகர்த்திச்  சென்று முடிவில் தீர்ப்பும் தீர்வும் வழங்குகிறார். வருபவர்கள் முக்காலே மூணு வீசம் பேர் கீழ்நிலை மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் கள்ள உறவு; குடி;காதல்; ஏமாற்றிவிட்டு ஓடுவது. இவைதான் பிரச்சனைகளாக முன் வைக்கப் படுகின்றன. இரு பாலைச் சேர்ந்தவர்களும் பேதமில்லாது குற்றம் இழைப்பவர்களாகவும் பாதிக்கப் படுகிறவர்களாகவும் இருக்கின்றனர். சில சமயங்களில் புகார் சொன்னவர்களே உண்மையில் தவறு செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் நிறைய ஆச்சர்யங்கள் உண்டு: தவறு செய்பவர்கள் பெரும்பாலும் குற்றத்தை பெருமளவில் மறுக்க முயற்சிக்காமல் அதற்கான நியாயங்களை நிறுவுவதில் முனைப்பு காட்டுகிறார்கள். நெறி ஆளுநர் பல சமயங்களில் தவறு செய்ததாகக் கருதுவர்களை கிட்டத்தட்ட மிரட்டுகிறார். இதற்கெல்லாம் சட்ட ஒப்புதல் இருக்கிறதா...

Aditya Mohan Dorakuna Bilahari

படம்

வைரமுத்துவின் சிறுகதைகள்-அஸ்வத்

கவிஞர்கள் கதைகளை எழுதுவதை நான் சற்று விநோதமாக உணர்வதுண்டு . எப்படி கவிஞர்கள்   கதைகள்  எழுத முடியாதோ அதேபோல கதைஞர்களும் கவிதைகள் எழுத    முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது . கதையென்பது நிலக்களனை விவரிப்பதுடன் முடிகிறது . கவிதை என்பது எப்போதும் மையப் புள்ளியை நேரடியாகச் சுட்டுவது . இரண்டின் விளையும் ஒன்றே . கவிதை என்றாலும் கதை என்றாலும் சொல்ல வந்த கருப்பொருளை வார்த்தைகள் அல்லது விவரிப்பையும் மீறி மறை பொருளாகவும் பூடகமாகவும் சுட்டுவதே காலத்தை வென்று நிற்கும் என்று தோன்றுகிறது . தவிரவும் வைரமுத்துவின் எழுத்தைப் பற்றி எனக்குச் சந்தேகங்கள் உண்டு . வார்த்தைச் சிறைகளில் மாட்டிக் கொண்டு வெளிவர முடியாதவர் என்கிற அபிப்ராயம் என் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டதால் அவரின் கவிதைகள் பக்கம்    அவ்வளவாகப் போனதில்லை . இவர் வார்த்தைக் குவியல்களுக்குள் சொல்ல முடியாத விஷயத்தைக் கண்ணதாசன் எளிய நடையில் சர்வ சாதாரணமாக சொல்லி விட்டுச் சென்று விட்டார் . இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இவரின் சிறு...