இடுகைகள்

பிப்ரவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தற்போதைய அரசியல் நிகழ்வுகளும் நாமும்

உலகின் பண்டைய இலக்கியங்களுக்கும் மகாபாரதத்துக்கும் அணுகுமுறையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. மற்ற இலக்கியங்கள் மனிதனைக் ‘கெட்டவன்’ என்றும் ‘நல்லவன்’ என்றும் வேறுபடுத்திப் பாகுபாடு செய்துதான் இலக்கிய ஆக்கங்களைச் செய்துள்ளன. மகாபாரதம் மட்டும்தான் மனிதர்கள் எவ்வாறு வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. தர்மர் செய்த தீங்குகளையும், துரியோதனன் செய்த நல்ல செயல்களையும் வியாசர் சுட்டத் தவறவில்லை. உப பாண்டவர்களைக் கொல்வதற்கு முன் நடக்கும் சம்வாதத்தில் காகங்களைத் தாக்கும் கூகைகளை அஸ்வத்தாமன் சூசகமாக ஏற்றுக் கொள்கிறான். அவனைப் பற்றிக் குறிப்பிடும் போதும் வியாசர் மகாத்மா என்றே குறிப்பிடுகிறார்.  நம் அணுகுமுறையில் உள்ள கோளாறு என்னவென்றால் எல்லா மனிதர்களையும் நல்லவன் கெட்டவன் என்று பாகுபடுத்தப் பார்ப்பதே. இப்படிப் புரிந்து கொண்டு உறவுகளைக் கட்டமைப்பது நமக்கு மிகவும் எளிதாக இருக்கிறது. தவிரவும் நமக்கு எப்போதும் ஒரு பொது எதிரி வேண்டியிருக்கிறது. அதற்கான இலக்குப் புள்ளிகளை சிலர் விதி வசத்தாலோ வேறு செய்கைகளாலே நம்மிடம் காண்பிக்கும்போது நமக்கு வேலை இன்னும் எள...

'நீட்டு'ம் தமிழ்நாட்டின் கல்விநிலையும்

நான் புகுமுக வகுப்பில் இருந்த போது ஐஐடி கேள்வித்தாளை பார்த்திருக்கிறேன். ஒரு இழவும் புரியாது. கேள்விகளெல்லாம் ஒரே கணக்குக் குறியீடுகளுடன் கிழக்கில் இருந்து மேற்கில் ஓடும். நான் பள்ளி இறுதி வரைத் தமிழ் மீடியத்தில் படித்தவன். என்றாலும் சடாரென்று புகு முக வகுப்பில் ஆங்கில வழிக்கு கல்விக்குத் தாவுவதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. என் குடும்பப் பின்னணி அப்படிப் பட்டது. அப்பா ஆங்கிலப் பேராசிரியர் என்பதால் என் ரத்தத்தில் ஆங்கிலம் ஓடுகிறது என்பார்கள். நான் பேசுகிற ஆங்கிலத்தைப் பார்த்துக்  கிறங்கிப் போய் என்னுடன் நட்புக் கொண்டவர்கள் பலர்.புகுமுக வகுப்பில் கணக்கில் 100/100 வாங்கினேன். இதையெல்லாம் வைத்துக்கொண்டு ஐஐடியில் ஜல்லி அடிக்க முடியாது போனதே உண்மை. அதே சமயம் என்னை மாதிரியே தமிழ் மீடியத்தில் பயின்று புகுமுக வகுப்பில் ஆங்கில மீடியத்தில் படித்து நிறைய மார்க்குகள் வாங்கிய நண்பன் ஸ்ரீநாத் ஐஐடி நுழைவுத் தேர்வை ஊதித் தள்ளினான்.மிகவும் சாதாரணமான குடும்பம். ட்யூஷன் எல்லாம் கிடையாது. தானாகப் படித்து வந்தவன். கல்லூரி விடுதியில்  அன்புச் செழியன் என்று ஒரு நண்பர். வேட்டி கட்டிக் கொண்டு இருப்...