சனி, 17 டிசம்பர், 2016

சமீபத்திய நான்கு நிகழ்வுகள்-சில பதிவுகள் I

பண மதிப்பின்மை அறிவிப்பு வந்த போது பர்ஸைத் திறந்து பார்த்தேன். 140 ருபாய் இருந்தது. பின்னர் தான் எல்லா செலவுகளையும் இத்தனை நாளாக அட்டையையும் ஆன்லைன் பண மாற்றங்களையும் வைத்தே சமாளித்து வந்திருக்கிறேன் என்று புரிந்தது. என்னிடம் கறுப்புப் பணமும் இல்லை. கையில் பெரும் பணம் வைக்க வேண்டிய தேவையும் இல்லை.
ஆனால்..... கறுப்புப் பண முதலைகள் அரசின் இந்த மிரட்டல்களுக்கு ஈடு கொடுத்தே வருகிறார்கள். பெருமளவில் பாதிக்கப் படுவது ஒழுங்கு முறைத் தொழில் சாரா வெகு மக்கள் தாம். அல்லாடுகிறாரகள். ஏற்கெனவே அன்றாடக் கூலி+அரை வயிற்றுக் கஞ்சி. இந்த லட்சணத்தில் சொந்தப் பணத்தை எடுக்கப் பிச்சை எடுக்க வேண்டிய நிலை. ஆன்லைன் வர்த்தகம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று வெந்த புண்ணில் வேலைப்  பாய்ச்சுவது போல் அரசின் அறிவுரை வேறு. அனா ஆவன்னா தெரியாதவனை திருப்புகழ் படிக்கச் சொன்னது போலிருக்கிறது. வேறு இடங்களில் புது நோட்டுகளைக் கொத்துக் கொத்தாக அள்ளுகிறார்கள். இவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தும் இது எப்படி நடக்கிறது என்கிற கேள்வி எழுகிறது. 
அதிகார/பண வர்க்கத்தின் மேலிருந்து கீழ் வரை நேர்மையின்மை கோலோச்சிக் கொண்டிருக்கிற இத்தனை பெரிய தேசத்தில் அதிலும் முக்கால் பேர் சோற்றுக்கு அலைகிற தேசத்தில் ஆளுகிறவர்கள் கடைக் கோடி மனிதர்களைக் கணக்கில் எடுத்துத் தான் தேச நலனை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
மிக முக்கியமாக கடைக் கோடி மனிதன் காட்டும் அளவற்ற பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையையும் ('கஷ்டமாத்தானிருக்கு; ஆனா நல்லதுக்குத் தான செய்யறாங்க!') பொறுத்து தான் இது போன்ற முடிவுகள் வெற்றியடைகின்றன; அவர்களின் அதிகாரம் இதை சாதிக்கவில்லை என்பதை ஆளுபவர்கள் உணர்ந்து செயல் படுவது நம் தேசத்தின் எதிர்காலத்துக்கு நல்லது.
சுருங்கக் கூறின் கடைக் கோடி மனிதனின் வழி மகாத்மா காண்பித்த வழி என்பதை ஆளுகிறவர்கள் மறக்கக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...