செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

66ஆம் சுதந்திர தினம்

சுதந்திர தினத்தை இந்தியா எப்படிக் கொண்டடுகிறதென்று  தொலைகாட்சி வழியாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பது நம் மரபாதலால் காலை எழுந்தவுடன் பெட்டியை ஆன் செய்தேன். மகாத்மா நாசர் 'சிக்னலில் நிற்காமல் போகிறார்கள்;வீதி பூராக் குப்பை; என்ன சுதந்திரம் வேண்டிக்கிடக்கிறது ' என்று புலம்பினார். தங்கர் பச்சன் 'விவசாயப் புரட்சி என்கிற பெயரில் விளை நி லங்களைப் பாழடித்து விட்டார்கள்' என்று அழுதார். ஷாலினி என்னும் மன நல மருத்துவர்- டிவியில் அடிக்கடி காணப்படுபவர்- அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஏற்பட்ட சமுக சிந்தனை மாற்றத்தால்  மட்டுமே இந்திய சுதந்திரம் கிடைத்ததே ஒழிய சுதந்திரப் போராட்டத்தால் கிடைக்கவில்லை என்று ஒரு ஒப்பற்ற கருத்தை வெளியிட்டார்.
இவர்கள் எல்லாம் நாட்டுக்கு இவர்களின் பங்களிப்பு இதுவரை என்ன என்று எண்ணிப் பார்த்துப் பின் இது போன்ற கருத்துக்களை வெளியிடுகிறர்களா என்று புரிந்து கொள்ள முடியவில்ல்லை. அவரவர் அவரவர் வேலையைப் பணம் வாங்கிக்கொண்டு செய்கிறார்கள். அவ்வளவே. அவரவர் ஜீவனோபாயத்துக்கான வேலைகளுக்கு மேல் என்ன செய்திருக்கிறார்கள்?
சுதந்திர தினத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம் ஒன்று தான் இருக்கிறது. எந்தவிதமான தவற்றைப் பற்றியும் நமக்கு குற்றவுணர்வு குறைந்து கொண்டிருக்கிறது.
'மாப்பிள்ளை குடிக்கிறாரா? யார் தான் குடிக்கவில்லை? லஞ்சம் வாங்குகிறானா? அது வழக்கம் தானே? கவுன்சிலர்  ஸ்கார்பியோ காரில் போகிறானா? நமக்கு எதாவது காரியம் ஆகுமா அவன் மூலம்? மணல் கொள்ளை போகிறதா? நாம் கட்டும் வீட்டிற்கு மணல் கிடைத்தால் போதும்' எது போன்ற மனச்சமாதானங்கள் தாம் நம் அவலங்களுக்குக் காரணம். சுதந்திர தினத்தில் இதைத் தான் நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது.
ஜெய் ஹிந்த்!

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...